பொலிவான சருமத்திற்கு இதோ சில டிப்ஸ் !

எல்லோருக்கும் பொலிவான மற்றும் பிரகாசமான சருமம் வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.முறையாக பராமரிப்பதன் மூலமாக நாம் பொலிவான மற்றும் மிருதுவான சருமம் பெறலாம்.

சருமத்தை அழகாக பராமரிக்க சில ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.பப்பாளியை நன்கு பேஸ்ட் போல் மசித்துக் கொள்ள வேண்டும் இதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.இந்த பேக் ஐ முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

ஒரு துண்டு வாழைப்பழத்தைப் போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.இதை சிறிதளவு தேன்,மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இந்த பேக் ஐ முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும்.இந்த பேக் மூலம் சருமம் மிருதுவாக அழகாக இருக்கும்.