டீசல் விலை உயர்வால்வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

தமிழகத்தில் முதல் முறையாக டீசல் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது. அத்துடன், உள்ளூர் வரிகளும் இணைக்கப்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.93 ஆகவும் உள்ளது. ஆனால், உள் தமிழகத்தில் இந்த விலை மேலும் அதிகரித்துள்ளது. இதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.

இன்று வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் டீசல் லிட்டருக்கு ரூ.100.29 என விற்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.