மும்பையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன, பல இடங்களில் சாலையில், மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்தியா கேட் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயலால் மும்பை விமான நிலையம் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டது.

குஜராத் மாநிலம் டையூ குஜராத் – மஹூவா இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.