கோவையில் கோவிட் கேர் மையம் திறப்பு !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் ஜூவல் ஒன் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.

இதனை உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இது குறித்து, எமரால்டுஜூவல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், இம்மையத்தில் 290 படுக்கைகளும் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கூடிய இந்த மையத்தில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு, அவர்களது மன நலம் பேணுதல் , அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளுதல் ஆகிய அம்சங்களில் இம்மையம் தனிப்பட்ட சுவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.