ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு

உலகளவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 207 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.இதுவரை உலகளவில் 6 கோடியே 7 லட்சத்து 36 ஆயிரத்து 801 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 27 ஆயிரத்து 80ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 42 ஆயிரத்து 128ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 30 ஆயிரத்து 384 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.