தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கினார்.
அவர் கூறியதாவது, “இந்தப் புத்தாண்டு முதல் மண்டல வாரியாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்துவருகிறது. முதல் கூட்டமாக தென்மாவட்டங்களின் நிர்வாகிகள் சந்திப்பு திருநெல்வேலியில் நடந்துவருகிறது.
அதிமுக கூட்டணியில் தமாகா தொடர்ந்து அங்கமாக உள்ளது. அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி, எதிரில் இருக்கும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவும் கூட்டணி.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். தமாகா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது எனக் கூறினார்.



