தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு !

கரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.இதனால் மக்களை கரோனா கால விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்திவருகிறது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடந்தாண்டு மார்ச் 25-ம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

கடந்த முறை அரசு அறிவித்த ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்,இன்று அரசு ஊரடங்கு குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.