தட்கல்’ முறையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த நாளிலேயே அவர்களின் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும்.
குறிப்பாக ‘தட்கல் எல்.பி.ஜி. சேவா’ மூலம் முன்பதிவு செய்த அரைமணி நேரத்தில் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வந்துவிடும்.
ஆனால் தட்கல் முறையில் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தட்கல் முறையை பிப்ரவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.