நேற்று அமித்ஷா, இன்று மோடி- முதலமைச்சரின் இரண்டு நாள் விசிட் சக்ஸஸ்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர்.

பின்னர், இரவு 7.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுதமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடியை காலை 10.30 மணி அளவில், பிரதமர் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.