ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இரு வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பின்னர் நிலைமையைப் பொறுத்து நீட்டிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

தற்போது முழு ஊரடங்கிற்குப் பின்னர் பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.