தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு 14ம் தேதி முதல் பள்ளிக்கு வர உத்தரவு !

தமிழகத்தில் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மதிப்பெண் வழங்குவது மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிழ்கள்‌ வழங்குவது சார்ந்த பணிகள்‌ நடைபெற உள்ளதாலும், மாணவர்கள்‌ சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.

எனவே, அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப் பணியாளர்கள்‌ அனைவரும்‌ வரும் 14ம் தேதி முதல்‌ பணிக்கு திரும்பவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.