இது என்ன டா கொடுமை..சாப்பிடும் இட்லிக்குள் தவளை !

சாப்பிடும் இட்லியில் தவளை..ஆம் ..கும்பகோணத்தில் நோயாளி ஒருவருக்கு வாங்கி வந்த இட்லியில் இறந்த நிலையில் தவளை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் முருகேசன்.இந்நிலையில், நேற்று, அவரது உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாப்பிட 4 இட்லி பார்சல் வாங்கி வந்து முருகேசனிடம் கொடுத்துள்ளார்.

அந்த பார்சலை பிரித்து சாப்பிட முயன்ற போது அந்த அதிர்ச்சியான சம்பவம் தெரிந்துள்ளது.
அவர் பார்சலில் இருந்த ஒரு இட்லியில் கறுப்பாக ஏதோ தென்பட்டுள்ளது. அதனை உற்று பார்த்தபோது இறந்த நிலையில் தவளை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதை கண்ட அனைவரும் அதிர்ச்சியாகினர் உடனே அந்த கடைக்கு சென்று ரிமையாளரிடம் முறையிட்டபோது, சரியாக பதிலளிக்காமல், மீதமிருந்த இட்லி மாவை கீழே கொட்டிவிட்டு உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.