பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் ‘தி பிக் பில்லியன் டே சேல்’ என்னும் பெரும் சலுகை விற்பனை நிகழ்வை அக்டோபர் 16 – 21ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தவுள்ளது.
பல லட்சக்கணக்கிலான பொருள்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெறமுடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தங்களிடம் இணைப்பில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதன்மூலம் பெரும் பயனடையும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த விற்பனையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 70ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.