திருமண விருந்திற்கு வந்த 5 பேர் குளத்தில் குளிக்கச் சென்ற பொழுது தண்ணீரில் மூழ்கி சாவு

ரகு 22 திலிப் 24 சந்திப் 23 தீபக் 25 சுதீப் 23 ஆகிய 5 பேரும் சிக்கமகளூரு மாவட்டம் ஆல்தூர் அருகே உள்ள வசதாரே என்னும் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர் அப்போது நீச்சல் சரிவரத் தெரியாத காரணத்தினால் ஐந்து பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர் குறிப்பாக ரகுவின் தங்கை

சந்தியாவிற்கு நேற்று திருமணம் நடந்தது இந்த நிகழ்ச்சியின் உறவினர் விருந்து இன்று நடந்த பொழுது இந்த உறவு நிகழ்ச்சிக்கு வந்த ரகுவின் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து ராகுவும் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச்சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்

விஷயம் தெரிந்ததும் ஆல்தூர் போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் வந்து பரிசல் மூலம் உடலை தேடி உடலை மீட்டு சிக்மகளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தனர்

பாசக்கார நாய் அதே ஊரைச் சேர்ந்த சந்திப் என்கின்றவர் வளர்த்த பாசக்கார நாய் சுமார் 3 மணி நேரம் குளத்தில் சந்திப்பின் உடலை தேடிய பொழுது சந்திப்பின் உடலை தேடும் வரை காத்து கொண்டு இருந்தது இதையடுத்து குளத்திலிருந்து சந்திப்பின் உடல் எடுத்த பின்பு அவர் அருகே சென்று உடம்பைத் தொட்டுப் பார்த்தும் அழுது கண்ணீரும் விட்டது ஆம்புலன்சில் அவரது உடலை ஏற்றியவுடன் ஆம்புலன்ஸ் பின்னாடி ஓடியது அனைவரும் நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியாக இருந்தது