கார் ஷோரூமில் பெரும் தீ விபத்து..!

மும்பை போவாய் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதனால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட தகவல்படி, தீபத்தால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அதேபோல அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணமும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேபோல இந்த வாரம் மும்பை கஞ்சூர்மார்க் பகுதியில் உள்ள பெரு நிறுவனத்தின் சர்வீஸ் செண்டரில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது, ஐந்து மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.