பட்டாசு ஆலையில் தீ விபத்து – சிவகாசி !

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது. தற்போது மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் தீக்குச்சி மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் நேற்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் 90% தீக்காயத்தால் பாதிக்ப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பெற்று வந்த நால்வரில் புதிய ராஜா என்பவர் உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நடராஜன், வீராச்சாமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.