பாஜக அலுவலகங்களில் டிச.14ல் முற்றுகை

மத்திய அரசின் சமரசத் திட்டத்தை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். அன்று பாஜக அலுவலகங்களை முற்றுகையிடவும் முடிவு செய்திருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி-ஹரியானா பாதைகளில் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் இருந்து ஹரியானா செல்லும் சாலைகள் முடங்கியுள்ளன.