டெல்லி போல் மாறும் மும்பை

இந்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒப்பீட்டளவில் ஒரு தென் மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் மும்பையில் இன்று கூடுகின்றனர்.

இதற்காக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாக மும்பை நோக்கி வருகின்றனர்.இதையடுத்து மகாராஷ்டிரத்தில் 100 விவசாயிகள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘சம்யுக்த ஷேத்காரி காம்கர் மோர்ச்சா’ என்ற இயக்கத்தை ஜனவரி 12ம் தேதி உருவாக்கின.

இந்த இயக்கமே இப்போது மும்பையில் நடைபெறும் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.