வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்..!

ஜனவரி 26ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் கலைக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பல்வேறு எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களின் போராட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மறுத்துள்ள நிலையில், சிங்கு, காசிப்பூர், டிகிரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.