மலையாள நடிகர் ஃபகத் பாசில் படங்களுக்கு தடை !

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபக்த் பாசில் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஃபக்த் பாசில் இவரது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்.

இந்த கரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய என பல்வேறு மொழிப் படங்களில் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவருகின்றன.

ஃபகத் பாசில் நடித்த படங்கள் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அவரது நடிப்பில் சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி-யில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு ஃபகத் பாசில் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாவது திரையரங்க உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர் நடிக்கும் படங்களை திரையரங்கில் திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.