இந்தியர்கள் அனைவருக்கும் இலவச ரீசார்ஜ்

கொரோனா பெருந்தொற்று காரணமாக மோடி தலைமையிலான அரசாங்கம் இந்திய பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் வலம்வரும் தகவலில், தடுப்பூசி செலுத்துவதில் வரலாறு படைக்கப்பட்டு இருப்பதை ஒட்டி இந்திய அரசு அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில், மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

மேலும் அரசு சார்பில் இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.