மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கும், புதுச்சேரியில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15- தொடங்குகிறது. 22-ம் தேதி முடிவடைகிறது. செப்ட்மபர் 23-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. செப்டம்பர் 27-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. அக்.,4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.