பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின்

விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்! தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திடுக என அவர் தெரிவித்துள்ளார்.