திமுக – காங் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை -புதுவை !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், கந்தசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி கூறியது ,திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். மேலும் கட்சி தலைமையின் ஆலோசனைப்படி, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.