தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் அவர், இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.மருத்துவ அறிக்கைக்கும், நாங்கள் வெளியிட்ட அறிக்கைக்கும் முரண்பாடு இல்லை
வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று கூறவில்லை, அரசின் விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் பரிசோதனை செய்து கொண்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.விஜயகாந்த் நலம்பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.