தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 வழங்கவேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.rs.3000 pongal gift
இந்நிலையில் இன்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, தே.மு.தி.க., கோரிக்கை விடுத்துள்ளது.