இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்கு பதிவு..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில், தற்போது ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணை வைத்து, இன்னும் பெயரிடாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இடையில் பாதியில் நின்று போன ‘இந்தியன் 2 ‘ படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கையும் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தங்கத்தின் விலை குறைவு