செல்வராகவன் போட்ட ட்வீட்…உங்களுக்கும் பொருந்தும் !

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை வைத்திருப்பர் செல்வராகவன்.இவருக்கென்று தனி பட்டாளமே உள்ளது.இவரது படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நல்ல அழுத்தமாக இருக்கும்.தற்போது மீண்டும் தனது இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என பிசியான இயக்குநர் ஆகி உள்ளார் செல்வராகவன்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் போட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது.. மனதின் எல்லைகளை இறுக்க மூடி விட்டு உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய போய் விடுங்கள்! எனக்கு எழுத்தைப் போல்!” என பதிவிட்டுள்ளார்.