Infant dead:அட கொடுமையே..வீட்டிலே பிரசவமா !

கோவையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நகை பட்டறை தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானார். 4-வது குழந்தை என்பதால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த சில நேரத்தில் ழந்தையும், தாயும் மயங்கினர். 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயகுமார் கொண்டு சென்ற நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது முறையாக குழந்தையை பெற்றுக்கொள்ளாமல் வீட்டிலே பெற்றதால் குழந்தை இறந்துள்ளது.இதன் காரணமாக இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 315வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.