தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் ( தனியார் மருத்துவமனை -6 பேர் , அரசு மருத்துவமனை – 10 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சை முடிந்து இன்று மேலும் 1,5592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,17,432 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 16,864 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 155 பேருக்கும், செங்கல்பட்டு 103 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆரியன் கானுக்கு 4 வருட போதை பழக்கம்