மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு !

corona-virus
இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் என பல மாவட்டங்களில் தினந்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடந்த 48 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1.93 லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இந்த அவசர ஆலோசனையில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.மற்றும் மக்கள் மாஸ்க் அணியாதது குறித்தும், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.