Case against vijay sethupathi: நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் மீது சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 2ஆம் தேதி, மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்த போது, நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும் அப்போது விஜய் சேதுபதி பொதுவெளியில், தம்மை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மகா காந்தியிடம் போலீசார் தீலிர விசாரணை நடத்தினர்.case filed against actor vijay sethupathi

பின்னர், விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தம் மீது, விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன், காதில் அறைந்ததாகவும், இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்