ஈராக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து !

கொரோனா தொற்று இந்த உலகத்தை ஆட்டி படைத்தது வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க ஈராக்கில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் கோர சம்பவம் நடந்துள்ளது.

அங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அந்த மருத்துவமனையில் புதிதாக கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனவினால் பாதிக்கப்பட்ட 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

அந்த வார்டில் எதிர்பாராதவிதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்வெடித்தது.இதனால் அங்கு இருந்த நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் வார்டு முழுவதும் நெருப்பு பரவியது. இதில் 50 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.