இதுவரை நாட்டு மக்கள் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரியுமா !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வாட்டி வதைக்கிறது.இதனை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுகொள்ளுவது மிக அவசியம்.இதுவரை 38 கோடிக்கும் அதிகமான (38,11,04,836) கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு அரசு செலுத்தியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 64,08,323 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 2,13,136 நபர்கள் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிஹார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.