மது பிரியர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக ஐந்து கட்ட கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர் இதை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆறாவது கட்ட தடுப்பூசி முகாம் செயல்பட இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மற்றும் மது பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராத காரணத்தினால் இந்த தடுப்பூசியை மற்றொரு நாளைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

வரும் இருவத்தி மூன்றாம் தேதி தமிழகத்தில் 50 ஆயிரம் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அசைவம் மற்றும் மது சாப்பிட்டுவிட்டு தடுப்பூசி செலுத்தக் கூடாது என வரும் வதந்தியை நம்பி மக்கள் தடுப்பூசி செலுத்த செல்லாததால் இந்த தடுப்பூசி முகாம் இருபத்தி மூன்றாம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.