தமிழகத்தில் மேலும் 3,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 3,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,691-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,42,152- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 38,093- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.