பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரோனா பரிசோதனை

விருத்தாசலம் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார மருத்துவ துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது தேமுதிக. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி அவரின் சகோதரர் எல்.கே.சுதீஷ்வுடன் வந்து, விருத்தாசலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதன்படி, ஐந்தாம் நாளான இன்று விருதாச்சலம் நகர்ப்புற பகுதிகளில் முரசு சின்னத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.