யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

முதுமலை முகாமில் வசிக்கும் 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் பாதிக்காமல் ஐந்து அறிவு உள்ள ஜீவன்களையும் பாதித்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு வண்டலூரில் உள்ள சிங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 9 வயது சிங்கம் பரிதாபமாக உயிர் இழந்தது.

இதனால் முன்னெச்சரிக்கைக்காக அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த கால்நடை மருத்துவம் தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் முதுமலை முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருந்தனர். அதன்படி இன்று 28 யானைகளின் தும்பிக்கைகள், மலம் கழிக்கும் இடம் போன்ற பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

யானைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் உத்தர பிரதேசத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனின் முடிவுகள் நான்கு நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.