நாளையும் கொரோனா நிவாரண நிதி பெறலாம்

தமிழகம் முழுவதும் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி-நேரங்களில் சென்று வாங்க முடியாதவர்கள் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு ரே‌ஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கான நாளை (ஞாயிற்றுகிழமை) ரேஷன் கடைகளில் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்ட தேதியில் டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை கொரோனா நிவாரண நிதி பெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.