கடந்த 24 மணிநேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,556 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,55,210 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,544ஆக உள்ளது. சென்னையில் நேற்று 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 194 ஆக உயர்ந்திருக்கிறது. 12 வயதிற்குட்பட்ட 97 சிறார்களுக்கு நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று 89 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று 19 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,055ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 2 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர்.