தமிழகத்தில் ஒரேநாளில் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் இன்று 26 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,814 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 3 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,069ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,816 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,54,323 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.