தமிழகத்தில் 1,559 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரேநாளில் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று 26 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,814 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 3 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,069ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,816 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,54,323 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.