தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,964ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 1,942ஆக குறைந்திருக்கிறது.

1,60,528 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1,941, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் என 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 217 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 27ஆம் தேதி 139ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 217ஆக உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 108 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது.