இந்தியாவில் 76 லட்சத்தை கடந்த கரோனா டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 76 லட்சத்தை கடந்தது.

மேலும் ஒரே நாளில் 38,310 பேருக்கு கரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 82.67 லட்சத்தை கடந்தது. 5.41 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,23,097 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று (நவ.,2) ஒரே நாளில் 10,46,247 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 11 கோடியே 17 லட்சத்து 89 ஆயிரத்து 350 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.