கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 1,929 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் இதுவரை கொரோனா தொற்று பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,77,237 ஆக உள்ளது.இன்று சென்னையில் 182 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,22,470 ஆக உள்ளது.மேலும் இன்று 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.இன்று கொரோனா தொற்றினால் 23 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.