தஞ்சையில் பெருகும் கரோனா தொற்று !

தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தில் இன்று மேலும் 17 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 185 ஆக உயர்ந்து உள்ளது.

தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் அமைத்து, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் இன்று 17 மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று உறுதியானதால், தஞ்சையில் மொத்த பாதிப்பு 185ஆக உயர்ந்துள்ளது.