அதிகரிக்கும் கொரோனா மக்கள் கவனமாக இருக்க வலியுறுத்தல் !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை பெரிதும் தாக்கியது.கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தியாவிற்கு பாதிப்பு அதிகம்.இந்த பரவலை தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசு தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளன.

இந்த ஊரடங்கு காலத்தில் பாதிப்பு எண்ணிக்கை பெரிதும் குறைய தொடங்கியது.ஆனால் மீண்டும் சில மாநிலங்களில் சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 44,658 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிக பாதிப்பு கேரளாவில் இருந்து வந்துள்ளது.இதில் 30,007 பேர் கேரளாவில் பதிவாகியுள்ளது.மற்ற மாநிலங்களை பொறுத்த வரை கேரளாவில் மிக அதிகம்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நம் நாட்டில் 496 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர்.கேரளாவில் மட்டும் 162 பேர் உயிரிழந்தனர்.இதுவரை மொத்த பாதிக்கப்பட்டவர்கள் 3,26,03,188 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை கொரோனாவில் இருந்து 3,18,21,428 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.