தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 48,182 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 2,775 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,18,786 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,45,46,292 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,583 பேர் ஆண்கள், 1,192 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,71,882 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,46,866 ஆகவும் அதிகரித்து உள்ளது. 3,188 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,53,061 ஆக உயர்ந்துள்ளது.

47 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 15 பேர் தனியார் மருத்துவமனை யிலும், 32 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.