பிரதமர் நரேந்திர மோடியுடன் சரத்பவார் இன்று சந்திப்பு !

பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்து பேசினார்.

மேலும் சரத் பவாரை அடுத்த குடியரசுத் தலைவராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானது. ஆனால் சரத்பவார் இதனை மறுத்தார்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சரத்பவார் இன்று காலை சந்தித்துப் பேசினார். சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. அதேசமயம் சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திப்பு தொடர்பாக புகைபடத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவார் முன்மொழியப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தநிலையில் இந்த சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.