கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் மோதிக்கொண்ட தொண்டர்கள்

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் பேசியதால், வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையிலேயே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகளையும் தூக்கி வீசினர். இந்த மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு