காவலர்களுக்கு ஒரு நற்செய்தி.. வாரம் ஒரு முறை விடுப்பு !

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.கொரோனா தொற்று இரண்டாம் அலை தமிழகத்தை அதிகம் தாக்கியது.இந்த ஊரடங்கு காலத்திலும் காவல்துறையினர் தங்கள் கடமைகளை சிறப்பாக ஆற்றினார்.

காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போலீசார் தங்களது உடலை பேணிக்காக ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் வாரத்தில் ஒருநாள் கட்டாய் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களுக்கு போன்றவற்றிக்கு விடுப்பு வழங்க வேண்டும்.காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.